
சட்டமன்றத்தில் நாம் இல்லாத காலத்தில் நமக்காகவும், தமிழ் மொழிக்காகவும் வாதாடிய தலைவர் காயிதே மில்லத் ஒருவரே! ... என்று பெருமை பாராட்டினார் என்.வி. நடராசன்.
"தந்தை பெரியார் தலைமையில் 1938 ஆம் ஆண்டு நாம் இந்தியை எதிர்த்துப் போராடினோம். அப்போது இருந்த தமிழக அரசு, நம் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. கணக்கற்ற கொடுமைகளை செய்தது.
அப்போது சட்டமன்றத்தில் நமது உறுப்பினர்கள் யாரும் இல்லை. நமக்காக வாதாட எவரும் இல்லாத நேரம் அது. ஆனாலும் அப்போது நமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்துச் சட்டமன்றத்தில் அன்றைக்கு எதிர்கட்சியாக இருந்த முஸ்லிம் லீக் இடிமுழக்கம் செய்தது. எதிர்த்து வாதாடியது. அத்தகைய நெடுங்கால உறவு நமக்கும் முஸ்லிம் லீகிற்க்கும் உண்டு"
இவ்வாறு 1968 ஆகஸ்டில் திருப்பத்தூர் கூட்டத்தில் அன்றைய தொழிலாளர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் என்.வி.நடராசன் பேசினார்.
1 comment:
Good job and well done gazzali
Post a Comment