Saturday, September 17, 2011
மா.பொ.சி. யும் - காயிதே மில்லத்தும்
காயிதே மில்லத் வாழும் நாட்டில் அவர் காலத்தில் நானும் வாழ்வதில் பெருமை அடைகிறேன் என்றார் சிலம்புச் செல்வர் மா.பொ.சி. காயிதே மில்லத்தின் 72 ஆம் பிறந்த நாள் விழாவின் போது அவரது மொழிப்பற்றையும், நாட்டுப் பற்றையும் இவ்வாறு எடுத்துரைத்தார்.
"மதத்தால் நாங்கள் வேறுப்பட்டிருந்தாலும், பேசுகின்ற மொழியால், பிறந்த நாட்டால் ஒன்றுப்பட்டவர்களாக இருக்கின்றோம். அரசியலிலே காயிதே மில்லத் அவர்கள் ரொம்பவும் சாதுவானவர். சண்டை சச்சரவுகள் வேண்டாதவர். சண்டை போட்டுக் கொள்ள விரும்பாதவர். நான் சண்டைக்குப் பயன் இல்லாதவன். அப்படிப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து இருக்கிறோம் என்றால் இந்த நாட்டில் அமைதி இருக்கும் என்று தானே பொருள்?"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment