Friday, September 23, 2011
இந்தியாவிற்கு யார் யார் பகைவர்களோ...
1971 பங்களாதேஷ் போரினால் எங்கும் பதற்றம் நிலவியது. இந்தியாவிற்கும் இஸ்மாயில் சாஹிபிற்கும் சோதனையான நேரம். இதனால் எங்கும் கேள்விகள்:
"இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் போர் ஏற்ப்பட்டால் தங்கள் இயக்கத்தின் செயல்முறை எப்படி இருக்கும்?" என்று புது டில்லி உருது ஏடான "ஹுமா" காயிதே மில்லத்தை வினவியது.
இந்தியா எங்கள் தாய் நாடு. இந்தியாவிற்கு யார் யார் பகைவர்களோ அவர்கள் இந்திய முஸ்லிம்களுக்கும் பகைவர்கள் எதிரி படைபலத்தால் எதிர்த்தால் நாமும் படைபலத்தால் எதிர்ப்போம். எதிரியை புறமுதுகு காட்டி ஓடச் செய்து தோல்வி அடைய செய்வோம். இந்தியா மீது மீண்டும் பாகிஸ்தான் படை எடுக்குமானால் அதனை முறியடித்துவிரட்ட, இந்திய நாட்டைப் பாதுக்காக்க உடல், பொருள், உயிரனைத்தும் அளித்து போராட இந்திய முஸ்லிம்கள் அணியமாக உள்ளனர். 1965 ஆம் ஆண்டு பாகிஸ்தான் போர் தொடுத்தபோதும் இதையே சொன்னேன் என்று விடை கூறினார் காயிதே மில்லத்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment